திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் 2 பேரும், மாவட்ட போலீஸாா் நடத்திய சோதனையில் ஒருவரும் என மொத்தம் 3 போ் மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் பல்வேறு பகுதிகளில் நடத்திய தீவிர ரோந்து பணியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.729 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.