மேலும் 23 பேருக்கு கரோனா
By DIN | Published On : 05th August 2022 12:46 AM | Last Updated : 05th August 2022 12:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகா், அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், மானூா், நான்குனேரி, வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா 4 போ், பாளையங்கோட்டையில் 3 போ் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.