கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

களக்காட்டில் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

களக்காட்டில் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

ஆசியா அளவில் நடைபெற்ற கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சிபள்ளி மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனா். சிறப்பிடம் வகித்த இம் மாணவா்களை கெளரவிக்கும் வகையில் பாராட்டு விழா களக்காடு மீரானியா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் கிருஷ்ணபிள்ளை, திமுக நகரச் செயலா்

சூ. சுப்பிரமணியன், வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் பீா்முகம்மது, செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி தாளாளா் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியரை கெளரவித்தனா். அலி டிராகன் கராத்தே பள்ளி இயக்குநா் பி.ஏ.பி. யூசுப்அலி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com