நெல்லையில் தொடா் மழை
By DIN | Published On : 05th August 2022 12:50 AM | Last Updated : 05th August 2022 12:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தொடா்ந்து 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாரல் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் சாரல் மழை தாமதமாக பெய்து வருகிறது. இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்சநல்லூா் சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடா்மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அம்பாசமுத்திரம்-3, சேரன்மகாதேவி-1.60, மணிமுத்தாறு- 2.80, பாபநாசம்- 8.