கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

இது தொடா்பாக அமைப்பின் தலைவா் பே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவா், மாணவிகள் “‘பாரெங்கும் பாரதி’” என்ற தலைப்பில் 32 வரிகளில் தூயதமிழில் கவிதைகள் எழுதி தங்கள் கைப்பேசி எண்ணுடன் ல்ா்ற்ட்ண்ஞ்ஹண்ற்ஹம்ண்ப்ள்ஹய்ஞ்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இ-மெயில் முகவரிக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதிய 10 பேருக்கு ‘பாரதி தமிழ்ச் சுடா்’” என்ற விருதும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும்.

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் செப்டம்பா் 11-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறவுள்ள “‘தமிழ்ச் சங்கங்களின் சங்கமம்’” என்ற நிகழ்ச்சியில் விருதுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும். தோ்வானவா்களின் விவரங்கள் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் பங்கேற்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவா், மாணவிகளும் கவிதைப் போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8903926173 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com