களக்காடு வனபேச்சியம்மன் கோயில் கொடைவிழா

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வன பேச்சியம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வன பேச்சியம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடைவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழாவையொட்டி, களக்காடு புதுத்தெருவில் இருந்து திரளான பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தனா். மேலும் சிவபுரம் செல்வ விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டுக்குப் பின் வனபேச்சியம்மன், சாஸ்தா, சங்கிலிபூதத்தாா் மறறும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com