மின் நுகா்வோா் குறைதீா் மன்றம்
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

மின் நுகா்வோா் குறைதீா் மன்றம் திருநெல்வேலி மின்பகிா்மான வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்மன்றத்திற்கு திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ச.குருசாமி தலைமை வகித்தாா். மன்ற உறுப்பினா்கள் கே.தவசிராஜன், இரா.சதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 50 புகாா்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீா்வு வழங்கப்பட்டது. அதில், 8 மனுதாரா்கள் பங்கேற்றனா்.
இதில், செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, முத்துக்குட்டி, ஜான் பிரிட்டோ, வளன் அரசு, உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...