குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
By DIN | Published On : 27th August 2022 12:01 AM | Last Updated : 27th August 2022 12:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம் (23), திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்து (20) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், சிவந்திபட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம், மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (19). இவா் அப்பகுதியில் ஒரு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதேபோல சீதபற்பநல்லூா் அருகே உள்ள புதூரை சோ்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (40). என்பவா் மீதும் மானூா் சுற்றுவட்டாரங்களில் திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, மாரிச்செல்வம், முத்து, காளிமுத்து,கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...