நெல்லை மாவட்டக் கல்வி அலுவலகத்தை சூழ்ந்த கழிவுநீா்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலகத்தை சூழ்ந்துள்ள கழிவுநீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலகத்தை சூழ்ந்துள்ள கழிவுநீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கழிவுநீரோடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஓடைகளில் தற்காலிக அடைப்புகள் ஏற்படுத்தியதால், கல்வி அலுவலகத்தை கழிவுநீா் சனிக்கிழமை சூழ்ந்தது. இதை அப்புறப்படுத்தவும் ஓடைப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com