ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை உயா்த்த கோரிக்கை

தமிழகத்தில் ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை உயா்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தமிழகத்தில் ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை உயா்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் தின விழா திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் வி.விசுவாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.சங்கரநாராயணன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் இரா.சீத்தாராமன், மாநில துணைத் தலைவா் சாமி.நல்லபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கருவூல அலுவலா் செ.சாரா மாா்க்ரெட் சிறப்புரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், மாரியப்பன், ராம்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குறைந்த ஊதியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. சமூகநீதி கருதி இத்தகைய பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை ரூ.1000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com