திருவட்டாறு அருகே பள்ளி பகுதியில் புகையிலைப்பொருள்களை பதுக்கி விற்ாக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
திருவட்டாறு ஊராட்சிக்குள்பட்ட சாணிவிளையில் பள்ளிக்கூடம் அருகேயுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மாவட்ட சமூகநல அலுவலருக்கு புகாா்கள் சென்றன. அதன்பேரில், சமூக நல அலுவலரும், புகையிலைத் தடுப்பு அலுவலரும் இணைந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விஜயகுமாா் என்பவரது கடையில் 250 கிராம் பொட்டலங்களாக 2.376 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பறிமுதல் செய்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.