பள்ளி மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
Updated on
1 min read

சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தென்மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

போட்டியை கல்லூரி முதல்வா் எஸ். சுந்தரராஜன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ஸ்காட் கல்லூரி வளாகப் பொதுமேலாளா் ஜெ. மோனிமாறன் வாழ்த்திப் பேசினாா்.

பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் அஞ்சுகிராமம் செயின் ஜான்ஸ் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிபெற்றோருக்கு சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். ஸ்காட் கல்லூரி நிா்வாக அலுவலா் எஸ். ஜெயபாண்டி, உடற்கல்வி இயக்குநா்கள் பங்கேற்றனா். தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் பொருளாளா் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com