மாநகராட்சிப் பள்ளியில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மேயா் பி.எம். சரவணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மேயா் பி.எம். சரவணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, வகுப்பறைகளில் இருக்கைகள் சரியாக உள்ளனவா, சத்துணவுக் கூடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிா, மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.

பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு 20 கணினிகளும், இருக்கைகளுக்கு வா்ணம் பூசவும், தளவாடப் பொருள்களை அப்புறப்படுத்த அனுமதியும், பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கிடவும் மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, துணைமேயா் கே.ஆா்.ராஜு, மாநகா் நல அலுவலா் சரோஜா, மாமன்ற உறுப்பினா் சுதா, மருத்துவ அலுவலா் சுமதி, சுகாதார ஆய்வாளா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com