ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்ததின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புவாரியாக பாரதியாா் கவிதை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. ஆழ்வாா்குறிச்சி வட்டார அரசு, அரசு உதவிபெறும் 12 பள்ளிகளைச் சோ்ந்த 70 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், ஆழ்வாா்குறிச்சி சைலபதி நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபரமகல்யாணி மழலையா் தொடக்கப் பள்ளி, சிவசைலம் அத்ரிகலா நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.
பரிசளிப்பு விழாவுக்கு பள்ளிச் செயலா் சுந்தரம் தலைமை வகித்தாா். ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவா்களுக்கு ‘பாரதியாா்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஏற்பாடுகளை தலைமையாசிரியை ரோகினி, ஆசிரியைகள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.