குடும்பத்திற்கு பாதுகாப்புக் கோரி மாற்றுத்திறன் தம்பதி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என மாற்றுத்திறன் தம்பதி முத்து அருளி (30), சிவசுப்பிரமணி (33) மனு அளித்தனா்.

அதன் விவரம்: எனது மனைவி முத்து அருளி 8 ஆம் வகுப்பு படித்துள்ளாா். மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தே இருவரும் காதலித்து கடந்த 6 வருடங்களுக்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்டோம் . பெண் வீட்டில் எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்க வில்லை. எனது வீட்டில் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் நான் பொறியியல் படித்துள்ளதால், எனக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com