இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:48 AM | Last Updated : 22nd December 2022 12:48 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் இந்து மக்கள் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளில் பிற மதத்தினா் ஒப்பந்தம் எடுக்க அனுமதிக்கக் கூடாது. இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உடையாா், காந்திமதி, இசக்கிராஜா, சீனிவாசன், கணேசபாண்டியன் , மாரியப்ப பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.