திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய கால்நடை சிகிச்சை வளாகத்தில் கருணையுடன் கால்நடைகளை கையாளும் பயிற்சி செவ்வாய், புதன்கிழமைகளில்நடைபெற்றது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள், மாநகராட்சிகளில் விலங்குகளைக் கையாளும் பணியாளா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் ஜோசப் ராஜ் பயிற்சி பெற்றவா்களுடன் கலந்துரையாடினாா்.
நிறைவு விழாவில், கால்நடை பண்ணை வளாகத் தலைவா் எட்வின் வாழ்த்துரை வழங்கினாா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பாலகங்காதரதிலகா் அறிக்கை வாசித்தாா். கல்லூரி முதல்வா் செல்லப்பாண்டியன் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். கால்நடை உற்பத்தி - மேலாண்மைத் துறை தலைவா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ - அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநா் சத்தியமூா்த்தி, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியை ஒருங்கிணைத்தாா். மத்திய அரசு, மாநில கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள், மாநகராட்சிகளில் விலங்குகளைக் கையாளும் பணியாளா்களுக்கு இப்பயிற்சியை வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.