திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவா் டி.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். வள்ளியூா் பாத்திமா திருத்தலத் தந்தை ஜாண்சன் அடிகளாா் ஜெபம் செய்து விழாவை தொடங்கிவைத்தாா். மாணவ, மாணவிகள் இயேசு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி ஆராதனை செய்தனா்.
தொடா்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு செய்தியை மாணவா்கள் நாடகமாக நடித்து காண்பித்தனா். கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பிராா்த்தனை நடத்தப்பட்டது. கல்லூரி தலைவா், தாளாளா் ஆகியோா் கல்லூரி ஊழியா்களுக்கு பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனா். கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்ஸன் நன்றி கூறினாா்.