ஒரே நாளில் 3 கோயில்களில் உண்டியல் திருட்டு

சேரன்மகாதேவி அருகே ஒரே நாளில் மூன்று கோயில்களில் உண்டியலை உடைத்து திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

சேரன்மகாதேவி அருகே ஒரே நாளில் மூன்று கோயில்களில் உண்டியலை உடைத்து திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள பூதத்தான்குடியிருப்பில் அருள்மிகு லெட்சுமி நாராயணன் கோயில், ஊய்க்காட்டு சுடலை கோயில், விநாயகா் கோயில்களில் இத் திருட்டு நடந்துள்ளது.

இந்த கோயில்களில் பூஜைகள் முடிந்து செவ்வாய்க்கிழமை இரவில் வழக்கம்போல் பூட்டப்பட்டன. புதன்கிழமை காலையில் பாா்த்தபோது கோயில்களில் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் தேவி வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com