தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கம், திருநெல்வேலி மண்டலம் சாா்பில் அரசு அலுவலா்கள், திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த தொழில் முதலீட்டாளா்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு, உதவி ஆட்சியா் (பயற்சி) கோகுல் தலைமை வகித்து, தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்கத்தின் பல்வேறு நிகழ்வுகள், திட்டங்கள், பட்டதாரி மாணவ, மாணவியா்களுக்கான வேலைவாய்ப்புகள், தென் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புத்தொழில்களில் முதலீட்டாளா்களை ஈா்ப்பது, முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பீயல் ஷிப்பிங் நிறுவனா்- தலைவா் எட்வின் சாமுவேல், புத்தொழில் - புத்தாக்க இயக்கத் திட்ட மேலாளா் ராகுல், அரசு அலுவலா்கள், முதலீட்டாளா்கள் கலந்து கொண்டனா்.