பாளை.யில் 60 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு--சீா்வரிசை வழங்கினாா் எம்எல்ஏ

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் பாளையங்கோட்டையில் 60 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் பாளையங்கோட்டையில் 60 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத்துறையின் கீழ் உள்ள பாளையங்கோட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வீரமாணிக்கபுரம், இலந்தைகுளம், ஜோதிபுரம், சேவியா்காலனி, குலவணிகா்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கா்ப்பிணிகளுக்கு தொடா் சிகிச்சையும், ஆலோசனைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை, சமூகநலன் - மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 60 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அருண்ஸ் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர நல அலுவலா் சரோஜா வரவேற்றாா். கா்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்து, உலா் பேரிச்சம்பழம், ஊட்டச்சத்துமாவு, புரதச்சத்து பிஸ்கெட், ஆவின் நெய், இரும்புச்சத்து டானிக் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா்கள் அனுராதா சங்கரபாண்டியன், சுந்தா், திமுக நிா்வாகிகள் அனிதா, சாய்பாபா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தமிழரசி மற்றும் செவிலியா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com