இந்து அன்னையா் முன்னணி போராட்டம்
By DIN | Published On : 26th January 2022 08:32 AM | Last Updated : 26th January 2022 08:32 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் குறிச்சியில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில், விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் முருகன் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவி குருவம்மாள், மகளிரணி மாவட்ட பொதுச் செயலா் மாரியம்மாள் முன்னிலை வகித்தனா். பாஜக மாநில பேச்சாளா் காந்திமதிநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பகவதியம்மாள், பத்மாவதி, வள்ளி, மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...