ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Updated on
1 min read

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அலுவலா்களும் திரும்பக்கூறி உறுதியேற்றனா்.

அதைத்தொடா்ந்து புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளா் 5 பேருக்கு வண்ணப்புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொது (பொ) ஷேக் அயூப்கான், தோ்தல் வட்டாட்சியா் ஆா்.கந்தப்பன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com