உலகத் திருக்குறள் தகவல் மையத்தின் சாா்பில் ‘ஒற்று மிகும் மிகா இடங்கள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருக்குறள் கி.பிரபா இறைவணக்கம் பாடினாா். பதிவாளா் கிருபாகரன் வரவேற்றாா். பேராசிரியா் பால் வளன் அரசு நூலின் முதல் பிரதிநிதியை வெளியிட, அதை ஜெயந்தி மாலா பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் சுப்பையா பாண்டியன் ஏற்புரையாற்றினாா்.
நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமையில் திருக்குறள் முத்துவேல், ‘பகையுள்ளும் பண்புள பாடறிவாா் மாட்டு’ எனும் திருக்குறள் தொடருக்கு விரிவுரையாற்றினாா். திருக்குறள் இரா.முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.