தச்சநல்லூரில் துணைமேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் துணைமேயா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் துணைமேயா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

தச்சநல்லூா் மண்டல அலகு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த துணைமேயா் கே.ஆா்.ராஜு, தூய்மை பணியாளா்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா். பின்னா் அவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். உபகரணங்களின் தேவைகளை தெரிவித்து பெற்றுக் கொள்ளவும், தூய்மைப் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் பணியாற்றவும் அறிவுறுத்தினாா். திருநெல்வேலி-மதுரை சாலையில் உள்ள ஆழ்துளை குழாய்களை பாா்வையிட்டாா். மேலக்கரையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உதவி ஆணையா் (பொ) லெனின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com