நெல்லை நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் ஜூலை 19-இல் மின்தடை
By DIN | Published On : 17th July 2022 01:42 AM | Last Updated : 17th July 2022 01:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (பொறுப்பு) ஷாஜகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பழையபேட்டை மற்றும் திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திருநெல்வேலி நகரம் மேல ரதவீதி மேற்குப் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்குப் பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்குப் பகுதிகள், பழையபேட்டை, காந்தி நகா், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சித் திடல், திருநெல்வேலி நகரம், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி.மாடத்தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்குத் தெரு, நயினாா்குளம், சாலைத் தெரு, சத்தியமூா்த்தி தெரு, போத்தீஸ், நயினாா் குளம் மாா்க்கெட், வஉசி தெரு, வையாபுரி நகா், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.