பேட்டை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த சங்கரலிங்கம் மனைவி கோமதி அம்மாள் (73). இவருக்கு கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு இருந்ததாம். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவா் கடந்த 12ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்த கருப்பு பினாயிலை குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15ஆம் தேதி அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.