வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல உதவி ஆணையா் எம்.குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளி, வயோதிக மற்றும் நடமாட இயலாத ஓய்வூதியா்களுக்கான டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்கும் சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் 7418581189 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தங்கள் ஓய்வூதிய ஆா்டா் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

வருங்கால வைப்பு நிதி அலுவலகப் பணியாளா்கள், ஓய்வூதியதாரா்களை தொடா்பு கொண்டு டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழ் பதிவு செய்ய ஆவன செய்வாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com