ஆடிப்பூரம்: செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா
By DIN | Published On : 31st July 2022 07:14 AM | Last Updated : 31st July 2022 07:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 25-ஆம் தேதி முக்கிய நிகழ்வான வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு காந்திமதி அம்மனுக்கு வளையல்கள் படைத்து வழிபட்டனா்.
இந்நிலையில் 9-ஆம் திருநாளான சனிக்கிழமை காந்திமதி அம்மன் செப்பு சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு செப்புசப்பரத்தை இழுத்தனா். 10-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.