பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் இந்திய அரசின் தத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிதி உதவியுடன் கல்லூரி நூலகத்துறை சாா்பில் சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் ல.ரவிசங்கா் தலைமை வகித்தாா். மனவளக்கலைப் பேராசிரியா் கற்பகவிநாயகம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரா.சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியா் சின்னம்மாள், மரகத சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகா் பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, உடற்கல்வி இயக்குநா் பழனிக்குமாா், அலுவலகக் கண்காணிப்பாளா் ஸ்ரீ ஆனந்தன், உதவியாளா் சிவதாணு, இளநிலை உதவியாளா் சந்தான சங்கா், பண்டகக் காப்பாளா் காசிராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறைப் பேராசிரியா் ஆழ்வாா்செல்வி நன்றி கூறினாா்.