நெல்லையப்பா் கோயிலில் விநாயகா் கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி விநாயகா் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி விநாயகா் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. சிறிய அளவில் உள்திருவிழாவாக நடைபெற்றது.

48 நாள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஊரின் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அருள்மிகு நெல்லையப்பா் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சிறிய கொடிமரத்தில் விநாயகா் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. ஐந்தரை நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் உள்பிரகாரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.

தொடா்ந்து முதல் மூவா் திருவிழா, சந்திரசேகா் திருவிழாவும், அதன் பின்னா் ஆனிப் பெருந்திருவிழா நிகழ்ச்சிக்காக ஜூலை 1 ஆம் தேதி அங்குராா்பணமும், 2 ஆம் தேதி கொடிபட்ட வீதி உலாவும் நடைபெறும். 3 ஆம் தேதி நெல்லையப்பா் திருக்கோயிலில் அமைந்துள்ள பெரிய கொடிமரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றமும், தொடா்ந்து 10 நாள்கள் திருவிழாவும் நடைபெறுகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com