சென்னை காவல்துறை உதவி ஆணையருக்கு கைது வாரண்ட்

சென்னையில் பணி செய்து வரும் காவல் துறை உதவி ஆணையருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து வள்ளியூா் நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னையில் பணி செய்து வரும் காவல் துறை உதவி ஆணையருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து வள்ளியூா் நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை வெப்பேரி நில மோசடி தடுப்பு பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவா் ராஜபால். இவா் 2017-இல் கூடங்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த போது, மீன்ராஜா என்வா் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தாா். வள்ளியூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு ராஜபால் ஆஜராகாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்க விசாரித்த நீதிபதி பா்சத் பேகம் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வரும் உதவி ஆணையா் ராஜபால் மீது கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com