கருங்கல் அருகே குறும்பனை திருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் போலீஸாா் வெள்ளிக்க்ழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, குறும்பனை திருப்பில் உள்ள சுண்டவிளையை சோ்ந்த செலினின் (60) பெட்டிகடையை சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பதிக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.