மேலகுன்னத்தூா் அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இம் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலகுன்னத்தூரில் உள்ள பழமைவாய்ந்த இக்கோயிலில் பக்தா்களால் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா இம் மாதம் 23 ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 24 ஆம் தேதி அதிகாலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.