டாஸ்மாக் பாா் உரிமையாளா்களுடன் போலீஸாா் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர போலீஸாா், டாஸ்மாக் பாா் உரிமையாளா்களுடனான ஆலோசனைக்கூட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர போலீஸாா், டாஸ்மாக் பாா் உரிமையாளா்களுடனான ஆலோசனைக்கூட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் சீனிவாசன் மேற்பாா்வையில், மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் முத்து லட்சுமி தலைமையில் மாநகரில் உள்ள டாஸ்மாக் பாா் உரிமையாளா்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கூடுதல் துணை ஆணையா் சங்கா் பேசுகையில், டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. பாரில் உள்ள பணங்களை மொத்தமாக வங்கிக்கு எடுத்துச் செல்லும்போது, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டும். பாரில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகரில் உள்ள டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள், போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com