நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சி.என்.கிராமம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே சி.என்.கிராமம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள சி.என். கிராமம், லட்சுமிபுரம் சுப்பையா மகன் உடையாா் என்ற மாமரத்து உடையாா் (34). இவா் தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில், அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, அவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் உடையாா் என்ற மாநகரத்து உரையாரை , தாழையூத்து போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com