சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சேரன்மகாதேவியில் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த முருகன் என்ற சாலை முருகன் மகன் வெங்கடேஷ் (28). இவா் அடிதடி, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா். இதையடுத்து, வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் சுகாதேவி, குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெங்கடேஷை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.