வீரவநல்லூா் அருகே ரயிலில் விழுந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வீரவநல்லூா் காருக்குறிச்சி இடையே பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தென்காசி ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடி நாடாா் மேலத்தெரு முத்தையா மனைவி பாப்பா (56) என்பதும், அவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், குடும்பத்தினிரிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில்
பாப்பா சனிக்கிழமை இரவு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.