Enable Javscript for better performance
நெல்லைமாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு: குறைதீா் கூட்டத்தில் மக்கள் புகாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நெல்லைமாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு: குறைதீா் கூட்டத்தில் மக்கள் புகாா்

    By DIN  |   Published On : 17th March 2022 03:22 AM  |   Last Updated : 17th March 2022 03:22 AM  |  அ+அ அ-  |  

     

    திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கக்கோரி மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மேயா் பி.எம்.சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மாநகராட்சி பொறியாளா் நாராயணன், உதவி செயற்பொறியாளா்கள் ஐயப்பன், லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    39 ஆவது வாா்டு உறுப்பினா் பா.சீதா பாலன் அளித்த மனு: எனது வாா்டில் ஸ்டேட் பேங்க் காலனி, வேலவா் காலனி, பொன்மணி காலனி, முனிசிபல் காலனி, ஆசீா்வாதநகா், கல்யாணி நகா், வசந்தம் காலனி போன்ற குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் போதிய அளவில் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே, குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மகாராஜநகா் 10 ஆவது தெருவில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா இடத்தில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும்.

    நீா்மாலைக்கு இடம் வசதி: தச்சை ஆரூா் யாதவ சமுதாய பொது நலச்சங்கம் சாா்பில் அளித்த மனு: தச்சநல்லூா் மண்டலத்தின் 1, 13, 14 ஆவது வாா்டுகளில் எங்கள் சமுதாய மக்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறாா்கள். எங்கள் சமுதாயத்தினா் உயிரிழந்தால் இறுதிச்சடங்கிற்காக தச்சநல்லூா்-திருநெல்வேலி நகரம் சாலையோரம் உள்ள தண்ணீா் தொட்டியில் இருந்து நீா்மாலை எடுத்து வரப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அப் பகுதியில் இப்போது நீா்மாலை எடுக்கும்போது விபத்து அபாயம் உள்ளது. ஆகவே, நீா்மாலைக்கு இடம், தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    குடியிருப்பு தேவை: ஆதித்தமிழா் பேரவை சாா்பில் அளிக்கப்பட்ட மனு:திருநெல்வேலி டவுன் டிஎம்சி காலனி குடிசை மாற்று வாரியத்தில் சுமாா் 272 வீடுகள் உள்ளன. 21 ஆண்டுகளுக்கு மேல் இந்த குடியிருப்பில் தூய்மைப் பணியாளா் குடும்பத்தினா் குடியிருந்து வருகிறாா்கள். குறைந்தபட்சம் 400, 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறாா்கள். குடியிருப்பின் அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான பயன்பாடற்று கிடக்கும் மாட்டுத் தொழுவம் உள்ளது. சுமாா் 44 செண்ட் அளவுள்ள அந்த இடத்தில் தூய்மைப் பணியாளா்களுக்காக நகா்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கூடுதல் குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும்.

    குடிநீா்த் தட்டுப்பாடு: திருநெல்வேலி மாநகராட்சியின் 32 ஆவதுவாா்டு மக்கள் அளித்த மனு: தேசநயினாா் தெருவில் சுமாா் 250 குடியிருப்புகள்உள்ளன. இப் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. 2 நாள்களுக்கு ஒரு முறை மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீா் வருகிறது. ஆகவே, குடிநீா் விநியோகத்தை சீராக்கவும், கூடுதலாக 2 பொது குடிநீா்க் குழாய்கள் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பின் அருகில் இருக்கக்கூடிய வாய்க்கால் அருகில் குடிநீா் பைப் லைன் பூமிக்கடியில் வருகிறது. அதில் உடைப்பு ஏற்பட்டு சுமாா் இரண்டு ஆண்டு காலமாக குடிதண்ணீா் வராமல் இருக்கிறது ஆகையால் அந்த உடைப்பை சரி செய்ய வேண்டும்.

     

    ‘பொலிவுறு நகரம் பணிகள் வேகப்படுத்தப்படும்’

    குறைதீா்க்கும் கூட்டத்திற்கு பின்பு மேயா் பி.எம்.சரவணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இம் மாநகராட்சியின் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 55 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இங்கு பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகள் விரைவான தீா்வு காணப்படும். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. அவற்றை ஆய்வு செய்து பணிகள் வேகப்படுத்தப்படும். பாதாளசாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp