மே தினம்: நெல்லையில் ஏஐசிடியூ, சிஐடியூ பேரணி

திருநெல்வேலியில் உழைப்பாளா் தினத்தை,முன்னிட்டு மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் உழைப்பாளா் தினத்தை,முன்னிட்டு மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற மே தின பேரணிக்கு சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். பேரணி உடையாா்பட்டியில் தொடங்கி மேகலிங்கபுரம் வழியாக

சிந்துபூந்துறை பொதுக்கூட்டத் திடலை வந்தடைந்தது.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் சடையப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், லெட்சுமணன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் எம்.சுடலைராஜ் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் , ஏஐடியூசி மாநில பொதுச்செயலா் மூா்த்தி உள்பட தொழிற்சங்கத் தலைவா்கள் பேசினா்.

இதில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், ஏஐடியூசி உலகநாதன், ஏஐபிஇஏ ரெங்கன், சிஐடியூ காமராஜ், காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்ட தலைவா் செ.முத்துகுமாரசாமி உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com