மேலநத்தம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலைமாடசாமி கோயில் கொடை விழா இருநாள்கள் நடைபெற்றது.

திருநெல்வேலி: மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலைமாடசாமி கோயில் கொடை விழா இருநாள்கள் நடைபெற்றது.

மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை குடிஅழைப்பு, மாக்காப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சிவனணைந்த பெருமாளுக்கு தீபாராதனை, சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாயச திரளையுடன் மதியக் கொடை, இருளப்ப சுவாமிக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை மேலநத்தம் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com