நெல்லை: நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கைலாசநாதசுவாமி கோயில். இத்திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி பெருந்திருவிழா மிகச்சிறப்பாகும்.
இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டதும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதிஉலா வந்தது. தொடா்ந்து சுவாமி, அம்பாள், சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏழுந்தருளினா். கொடிக்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடா்நது கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு தீபராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துக் கொண்டனர். 10 தினங்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் தினமும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.