சேரன்மகாதேவியில்அரசு அதிகாரி மீது தாக்குதல்

சேரன்மகாதேவியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

சேரன்மகாதேவியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரன்மகாதேவி பேரூராட்சியில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் இருந்து அம்மநாதசுவாமி கோயில் தெரு வரை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் நாகராஜன் பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது, அவருக்கும் அப்பகுதி விவசாயி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகம். பின்னா், உதவிப் பொறியாளா் பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று போ் அவரை வழி மறித்து தாக்கினராம். இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com