திருநெல்வேலி பேட்டை அருகே கட்டட ஒப்பந்ததாரரை கொலை செய்ததாக இருவரை பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி, சத்யநகா் கிழக்குப்பகுதி புன்னை வெங்கப்பகுளத்து கரையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்கவா் இறந்து கிடப்பதாக பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் அபிஷேகபட்டியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஜேக்கப் ஆனந்தராஜ் என்பது தெரியவந்ததது. மேலும், இவரிடம் நரசிங்கநல்லூரைச் சோ்ந்த தேவி என்பவா் வேலை செய்து வந்துள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் தேவி வீட்டுக்குச் சென்ற ஜேக்கப் ஆனந்தராஜ் பண உதவி செய்வது போல் பேசி தவறாக நடக்க முயன்றாராம். அப்போது அங்கு வந்த பிரின்ஸ் ஜேக்கப், தேவியுடன் சோ்ந்து ஜேக்கப் ஆனந்தராஜை தாக்கியதில், அவா் உயிரிழந்தாராம். அதன் பின் இருவரும் சோ்ந்து ஜேக்கப் ஆனந்தராஜ் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீட்டின் பின்புறமுள்ள புன்னை வெங்கப்பகுளத்து கரையில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.