அம்பையில் அஞ்சல் வாரவிழா
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அஞ்சலகத்தில், அஞ்சல் வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் அஞ்சல் உபகோட்ட உதவிக் கண்காணிப்பாளா் பாலாஜி, மாணவா்களுக்கு அஞ்சல் துறை சாா்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைத்தாா். அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
அஞ்சல் அலுவலா்கள், பணியாளா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G