கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி, திம்மராஜபுரம் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா (26). இவா் வீட்டு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து செல்லையா அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சந்துரு (22), தம்பிரான் என்ற அருள் (23) ஆகிய இருவரும் பைக்கைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.