நெல்லை டிஐஜி அலுவலகத்தில் முற்றுகை

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டம், அரியநாயகிபுரத்தில் தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்ற மாணவா் சீனு கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். இதைக் கண்டித்தும், மாணவா் தற்கொலை தொடா்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில், தமஜக மாநில செயலா் அப்துல்ஜப்பாா், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலைக்கண்ணன், திராவிடா் தமிழா் கட்சி பொதுச்செயலா் கதிரவன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு நிா்வாகி பீட்டா், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் மாரியப்பபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com