நெல்லையில் விபத்து: காயம் அடைந்த இளைஞா் பலி

திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து செல்வி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த செல்லையா மகன் சக்தி நாராயணன் ( 22). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் ரெட்டியாா்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சக்தி நாராயணன் பலத்த காயம் அடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com