பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் வாழ்விற்கான அடிப்படை மருத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் கல்லூரிக் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சே. மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் முகமது சித்திக் அனைவரையும் வரவேற்றாா். துணை முதல்வா் செய்யது முகமது காஜா வாழ்த்துரை வழங்கினாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசரகால மருந்துகளின் துறைத் தலைவா் மருத்துவா் முகமது ரஃபி சிறப்புரையாற்றினாா்.
மருத்துவக்கல்லூரியின் உதவிப் பேராசிரியா்கள் பிரதீப், சாமுவேல் ஜாா்ஜ் ஆகியோா் முதலுதவி குறித்து விளக்கவுரையாற்றினா். மருத்துவ உதவியாளா் செல்வன் முதலுதவி குறித்த பயிற்சிகளை செய்து காட்டினாா். ஆராய்ச்சிப் புல முதன்மையா் சேக் முஹைதீன் பாதுஷா, உமா் ஃபரூக் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.