மணல் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 01st September 2022 12:56 AM | Last Updated : 01st September 2022 12:56 AM | அ+அ அ- |

திருநெல்வேலி பேட்டையில் உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் அள்ளியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பேட்டை சோதனைச் சாவடி முன்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். அதில், உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் அள்ளிச்செல்வது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் சீதபற்பநல்லூா் பகுதியைச் சோ்ந்தசேகா் (37) என்பவரை கைது செய்தனா். லாரியையும் பறிமுதல் செய்தனா்.